நியாயத்தீர்ப்பு நாள்

ஜனவரி 14, 2008

நியாயத்தீர்ப்பு நாள்

அசிம் மெகபூப் மன்னுலக வாழ்க்கைக்கு பின் இறைவனின் கியாம நாளை எதிர்பார்த்து காத்திருந்தான். அவன் மனம் நிறைந்து அமைதியாக இருந்தது. 48 வருடங்கள் இந்தியாவின் குடிமகனாக வாழ்ந்த வாழ்வு. அளவு குறைவுதான் என்றாலும், அவன் வாழ்க்கையில் பேசத்தக்க பல செயல்கள் உண்டு.

மும்பையின் புறநகரில், ஒரு சில்லரைக்கடைக்கு சொந்தக்காரனாக தொழில் நடத்தி, சொந்த வாழ்க்கையை ஒரு ஈமானுள்ள நல்லடியானாக இஸ்லாமிய ஷரத்துக்களின்படி நடத்தியிருந்தான். தவறாமல் மசூதிக்கு போவான். அங்குள்ள இமாமுக்கும் நல்ல நண்பன்.

அது மட்டுமல்ல. அசிம்மின் வாழ்க்கையில் அவன் பெருமைப்பட இன்னும் நிறைய இருந்தன. உண்மையில் அசிம் இறைவனுக்காக இந்த பூமியில் போரிட்டவன். அது கடினமாகத்தான் இருந்தது, ஆனால் அசிமுக்கு சுவனத்தில் கிடைக்கப்போகும் வெகுமதிகள் அவன் பட்ட துயருக்கெல்லாம் பலனாக இருக்கப்போகிறது.

எப்படியெல்லாம் இவற்றை சாதித்திருக்கிறேன் என்று அசிம் யோசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு சோதி தோன்றியது. கண்ணைக்கூசிய அந்த வெளிச்சத்தில் அவனால் சரியாக பார்க்க இயலவில்லை.

இடிமுழங்கும் குரலில் அசிம்முடன் ஒரு உரையாடல் தொடங்கியது.

இறை : அசிம், நான்தான் இறைவன். நீ என்னை அல்லாஹ் என்று சொல்கிறாய். நான் உலகைப்படைத்தவன். மிக்க பலசாலியும், எல்லாம் அறிந்தவனும், எங்கும் உள்ளவனும் ஆவேன்.

அசிம்: அல்லாஹூ அக்பர்!!! அல்லாஹூ அக்பர்!!! சுப்ஹான் அல்லாஹ். இறைவரே! நான் அசிம். உங்கள் உண்மையான அடிமை.

இறை: அசிம், நீ யாரென்று தெரியும். நான் இறைவன் இல்லையா?

அசிம்: மன்னிக்கவேண்டும் அல்லாஹ்! நான் இந்த கியாம நாளுக்காக இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன்.

இறை: ஆமாம். நீ காத்திருந்ததை அறிவேன். நீ எங்கே போவாய் என்று அறிய ஆவலாய் இருக்கிறாய் – என்னுடன் சுவனத்திற்கா, அல்லது மீளாத நரகத்துக்கா!

அசிம்: ஆமாம், சர்வ வல்லமை படைத்தவரே!, நான் சுவனத்திற்காக எவ்வளவு ஆவலாக காத்திருந்தேனோ, அது போல இப்போது தங்கள் முடிவை அறிந்துகொள்ள ஆவலாகத்தான் இருக்கிறேன். அல்லாஹ் அவர்களே!, நான் உங்களுக்கு என்னால் முடிந்த எல்லா விதத்திலும் சேவை செய்தேன், உங்கள் கட்டளைகளை விடாமல் பின்பற்றினேன்.

இறைவன்: என்னிடம் முடிவு இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பு சுவனத்தை பற்றி நீ தெரிந்துகொண்டதை சொல். நான் எல்லாம் அறிந்திருந்தாலும், உன் எண்ணங்களை அறிய முடிந்தாலும், உன்னுடன் இது குறித்து உரையாட விரும்புகிறேன்.

அசிம்: மிக்க நன்றி, அல்லாஹ்வே! நீங்கள் பரம கருணையானவர். சுவனத்தில் தங்கள் அருகாமையில் வசிக்கவும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், வெண்முத்து, பவளைத்தை போன்ற அழகிய, யாரும் தீண்டாத கன்னியர்களும் எனக்கு கிட்டும் என்பதை அறிவேன்.

இறைவன்: ஓகோ!, நரகத்தை பற்றி என்ன அறிவாய்?

அசிம்: அய்யோ! கொழுந்துவிட்டு எறியும் நரக நெருப்பில் வீழ்ந்து, கொதிக்கும் நீரில் கருக்கப்பட்டு, அதையே பருகுவது அல்லவா நரகத்தில். அதுதான் இறை மறுப்பாளர்களான காபிர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் இறக்கிய புத்தகத்தையும் தங்கள் கட்டளைகளையும் மறுத்தவர்கள்!

இறைவன்: சரி அசிம், நீ போகும் இடத்தை தெரிந்துகொள்வாய். தேவைப்பட்டால் என்னை நினைத்துக்கொள். சென்றுவா!

உடனை அசிம் பார்வையில் சில காட்சிகள் தோன்றின. ஆவலுடன் எதிர்பார்த்த தெளிந்த நீரோடைகளுக்கு பதில், கொதிக்கும் நீரும் நெருப்பும் துன்பமும் தென்பட்டன. அசிம் பதட்டப்பட்டான், கால்கள் நடுங்கின, பரிதாபமாக இறைவனை நினைத்துக்கொண்டான். இறைவன் மீண்டும் தோன்றினார்.

அசிம்: எல்லாம் வல்ல இறைவரே! நான் எங்கிருக்கிறேன்? சுவனத்தின் எந்த பகுதி இது? ஏன் சுவனம் நரகத்தின் காட்சிகள் போல தோன்றுகிறது?

இறைவன்: அசிம், நீ சொல்வது சரிதான். நீ நரகத்தில்தான் இருக்கிறாய். இந்த அனுபவங்களை உன் நம்பிக்கை மற்றும் கற்பனைக்கு ஏற்ப கொடுத்துள்ளேன். இந்த அனுபவம், நீ பூமியில் பலருக்கும் விவரித்த நரகத்தை போலவே தோன்றும்.

அசிம்: ஆனால், ஆனால், இறைவரே, நான் தங்கள் கட்டளைகள் எல்லாவற்றையும் கடைபிடித்தேன். தங்கள் புத்தகத்தில் அசையாத நம்பிக்கை வைத்து அவற்றில் கூறிய அனைத்தையும் செய்தேன்.

இறைவன்: இல்லை அசிம், இது உன் தவறான எண்ணம். நீ நான் சொன்னது போல செய்யவில்லை. நபிகளார் முகம்மது என்று நீ அழைக்கும் ஒரு மனிதர் சொன்னதுபோல செய்தாய்.

அசிம்: ஆனால், அவர் தங்களின் தூதர். நீங்கள் ஜிப்ரயில் மூலமாக அவருக்கு ஆணையிட்டீர்கள்.

இறைவன்: இது உனக்கு எப்படி தெரியும்? உன் கண்களால் பார்த்தாயா? நான் அப்படி உன்னிடம் சொன்னேனா?

அசிம்: இல்லையில்லை. இப்படித்தான் புனித புத்தகம், தங்கள் புத்தகம் குர்ஆன் சொல்கிறது.

இறைவன்: குர்ஆன் என் புத்தகம் என்று எப்படி சொல்கிறாய்? அது புனிதமானது என்று யார் சொன்னது?

அசிம்: ஏனென்றால், நபிகளார் ஸல், தாங்கள் அந்த புத்தகத்தை அவரிடம் இறக்கியதாக சொல்லியிருக்கிறார்.

இறைவன்: அசிம், மனிதர்கள் பலவற்றை சொல்லுகிறார்கள். ஒவ்வொரு நாளும், பலர் என்னிடம் பேசியதாக சொல்கிறார்கள். அதனால், அவர்கள் எல்லோரும் என்னிடம் பேசியதாக ஆகிவிடுமா?

அசிம்: எல்லாம் வல்லவரே! நான் பலர் அப்படிச்சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை, அவர் யாராக இருந்தாலும் சரி. ஆனால், ஸல் அவர்கள் உங்கள் தூதரானதாலும், அவர் மூலம் மனித இனத்துக்கு அனுப்பப்பட்ட குர்ஆனில் அவர்தான் கடைசி தூதர் என்று சொன்னதாலும் அவர் சொன்னதை நம்பினேன்.

இறைவன்: அசிம், உண்மைக்கும் – உண்மை என்று மக்களால் கோரப்படுவதற்குமுள்ள வித்தியாசத்தை நான் இப்போதுதானே விளக்கினேன். பலர் என்னிடம் பேசுவதாக சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் எல்லோரையும்போல சாதாரண மனிதர்கள்தாம்.

முகம்மது என் தூதன் என்று சொன்னால், அவன் என் தூதன் என்று ஆகிவிடாது. முகம்மது குர்ஆன் அவரிடமிருந்து அல்ல என்னிடமிருந்து அருளப்பட்டது என்று கோரினால் அதனால் அப்படி ஆகிவிடாது.

குர்ஆன் முகம்மது கடைசி தூதர் என்று கோரினால், அவர் கடைசி தூதராக, ஏன் ஒரு தூதராக கூட, ஆகிவிட மாட்டார். நானே வந்து குர்ஆன் என்னுடையது என்று சொன்னால் ஒழிய, உனக்கு குர்ஆன் என்னுடையது என்று தெளிவாகாது.

ஒரு (நிரூபிக்கப்படாத) கோரிக்கைக்கும் உண்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது.

உண்மையில், நீ கண்மூடித்தனமாக ஒரு மனிதன் நபி என்று சொல்லிக்கொள்வதை நம்பினாய். அதன் விளைவாக அவர் கொடுத்த புத்தகத்தையும் என்னுடையதாக நம்பியிருக்கிறாய்.

அப்படி அந்த புத்தகம் என்னுடையது என்று நம்பியதால் (ஆனால் உண்மையில் அப்படி இல்லாததால்), முகம்மது கடைசி தூதர் என்று புத்தகத்தில் சொல்லப்பட்டதைக்கொண்டு உன் (அடிப்படை) தவறான எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டாய்.

அசிம்: மன்னிக்கவேண்டும், இறைவா. மன்னிக்கவேண்டும். என்மீது கருணை காட்டுங்கள். நான் பாவம் செய்துவிட்டேன். கண்மூடித்தனமாக நம்பிவிட்டேன். என்னை மன்னியுங்கள்.

இறைவன்: நீ என்னை நிராசையாக்கிவிட்டாய். என்னை அவமதித்து விட்டாய். என் மக்களில் பலரை ஒதுக்கினாய். நான் கருணையாய் அன்பு செலுத்தியவர்களை நீ வெறுத்தாய். நீ பாபம் செய்துவிட்டாய் அசிம், எனக்கு எதிராக.

அசிம், நீ குர்ஆன் படித்ததை ஞாபகப்படுத்திக்கொள்.

நான் குர்ஆனில் சொன்னது போல பாரபட்சமானவனாக இருப்பேன் என்று நம்பினாயா? அதில் சித்தரிக்கப்பட்டது போல நான் கொடுமைக்காரனாக இருந்திருப்பேன் என்று நினைக்கிறாயா? உன்னைப்போன்ற பிறந்து இறக்கும் மனித குலத்தின் உதவி எனக்கு தேவைப்படும் என்று நினைக்கிறாயா?

மற்ற மதங்கள் இருக்க கூடாது என்று நான் நினைத்தால் ஒரு யூத, கிருத்துவ, புத்த குழந்தைகளை பிறப்பித்துக்கொண்டே இருப்பேனா?

எனக்கு எதற்காக மனிதர்களின் உதவி தேவைப்படும்?
குறைந்த அளவில் நல்லவைகளையும், ஆனால் அதிகமாக தீயவையும் கொண்டு, எல்லையற்ற குழப்ப வரிகளால் எழுதப்பட்டு, மனித நேயத்தை மறுதலிக்கும் அளவு மீறிய வன்முறை கொண்ட ஒரு புத்தகத்தை நீ படித்தாய். அதை நான் அருளியது என்று நீ நினைத்ததே எனக்கு பெருத்த அவமானம்!
என் கட்டளைகளை ஒரு தப்சீர் குறிப்புகளைக் கொண்டுதான் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் அளவுக்கு நான் தெளிவாக பேச, எழுத தெரியாதவனா? பல மனிதர்கள் எழுதிய புத்தகங்கள் தெள்ளங்தெளிவான செய்திகள் நிறைந்து இருக்கின்றன. அவை சிறந்தவை என்றாலும் அவையெல்லாம், மனிதர்கள் படைத்தவைதான். ஆனால், நான் அருளியதாகிய ஒரு புத்தகம் அவற்றை விடவா மோசமாக இருக்கும்? நீ என்னை எப்படி இவ்வாறு அவமானப்படுத்தினாய் அசிம்?

உண்மை என்ன தெரியுமா? குர்ஆன் ஒரு மனிதனின் படைப்பு. எனக்கு குறைவானது.

அசிம்: இறைவா, மன்னித்துவிடுங்கள். சர்வ வல்லமை பொருந்தியவரே, மன்னித்து விடுங்கள்.
நான் பதினைந்து வயது மாணவனாக இருக்கும்போது பள்ளியில் குர்ஆனின் சில பகுதிகளில் சந்தேகம் விளைந்தது. குர்ஆனில் படித்ததுபோல் ஒரு இறைவன் தன்னை தொழுவதற்காக மனிதர்களை ஏன் படைக்கவேண்டும் என்று என்னை கேட்டுக்கொண்டேன். என் மனதில் நீங்கள் நான் படித்ததற்கு மாறாக கர்வமும், அதீத சுய-அன்பும் அற்று இருப்பீர்கள் என்று தோன்றியது. ஆனால், என் சுற்றத்தாரால் குர்ஆனில் நம்பிக்கை ஊட்டப்பட்டு கண்மூடித்தனமாக நம்பினேன். என் பாவங்களை மன்னியுங்கள், அல்லாஹ்

இறைவன்: தவறான நம்பிக்கையில் விழுவது சில சமயம் மிகவும் எளிது, அசிம். நான் மனிதர்களுக்கு அளித்த மூளை மிகவும் சிறந்தது. இந்த பூமியில் வேறு எந்த இனத்துக்கும் யோசிக்கும் திறைமை கொடுக்கப்படவில்லை. அந்த திறைமையை நீ உபயோகித்திருக்க வேண்டும், அசிம். அந்த திறைமை மானிடனான உனக்கு ஒரு பரிசு.

அசிம்: மன்னியுங்கள் இறைவா. என்னை சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் இஸ்லாத்தில் நம்பிக்கை வைக்க வற்புறுத்தினார்கள். விஞ்ஞானம், மனித உரிமைகள், வரலாறு, புனித அறிவு என்று பல ஆதாரங்களை குர்ஆனில் காட்டினார்கள்.

இறைவன்: நீ கண்மூடித்தனமாக நம்பியிருக்கிறாய் அசிம். உனக்கு ஒரு பகுத்தறியும் மனது கொடுக்கப்பட்டது. நீ உன் பாவங்களுக்கு பிறரை நோகாதே. உன் செயலுக்கும், எண்ணங்களுக்கும் நீயே பொறுப்பு.


நீ ஒவ்வொரு நாட்களையும் உன் நம்பிக்கைகளை மேலும் பலப்படுத்திக்கொள்ளவும், நீ பாதுகாப்பாய் இருக்கவுமே உபயோகித்திருக்கிறாய்.

தினசரி சஜ்தா தவறாமல் சொன்னாய். அதனால், உன் தவறான நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக்கொண்டு மேலும் தவறான நம்பிக்கை பெற்றாய். ஆனால், உண்மையில் தினசரி ஒரு பொய்யை சொல்லிக்கொண்டு என்னை அவமானப்படுத்திக்கொண்டிருந்தாய்.

“முகம்மது தூதர் என்ற உண்மைக்கு நான் சாட்சியாகிறேன்” என்று நீ ஒவ்வொரு முறை சஜ்தா சொல்லும்போதும், நீ பொய் சொன்னாய், அசிம். அது பொய்சாட்சி இல்லையா? எதை வைத்து நீ சாட்சி சொன்னாய்? நீ என்ன நேரில் பார்த்தாயா? நீ பொய் பேசினாய், அசிம்.

அதுமட்டுமல்ல, உன் சாட்சி எனக்கு அவமானமிழைத்தது. எல்லாம் அறிந்த நான் மட்டுமே நடந்த அனைத்துக்கும், மேலும் நடக்கப்போவதற்கும் சாட்சியாகிறேன். வேறு மிருகமோ, தாவரமோ, ஆணோ, பெண்ணோ நான் காணும் எதையும் காண முடியாது. உண்மையில், சாட்சி நீ உன்னை எனக்கு இணை வைத்தாய்.

நீ செய்ததை யோசித்திருக்க வேண்டும், அசிம். மாறாக, கண்மூடித்தனமாக சொன்னாய், அப்படி சொல்லும் மற்றவர்களையும் உன் சுற்றத்தில் வைத்து நிம்மதியாய் இருந்தாய். உன்னை சுற்றியிருந்த மக்களும், பொய்யான தகவல்களும், நேர்மையில்லாத நியாயங்களும், உன் மனதுக்கு போதை மருந்துகள் போல, உன் ஈமான் மற்றும் உன் மறுவாழ்வை பற்றி உன்னை உண்மையல்லாத ஒரு சுகத்தை ஏற்படுத்தியது.

அசிம்: இறைவா, என் தவறான நம்பிக்கைகளுக்கும், செயல்களுக்கும் நான் மிக்க வருந்துகிறேன். தயவு செய்து மன்னித்துவிடுங்கள். முகம்மதுவின் குர்ஆனில் சொன்ன நரகத்திற்கு நான் மிகவும் பயந்தேன். நரகத்தைப்பற்றி மற்றவர்கள் சொன்னதை கேட்டும், படித்தும் பயந்துபோனேன், அது என்னை யோசிக்காமல் நம்ப வைத்துவிட்டது.

இறைவன்: அசிம், அதை நான் அறிவேன். நீ பயத்தால் அந்த வழியை பின்பற்றினாய். நீ ஒரு கோழையாகிவிட்டாய். உன் உள்ளமும், இதயமும் சொன்னதை புறக்கணித்தாய். அதனால், மனிதகுலத்துக்கு என் கொடைகளான – கருணையும், பகுத்தறிவையும் அவமதித்தாய்.

என்னைப்பற்றி உன்னிடமிருந்த இரண்டு உண்மையான சான்றுகள் உன் அறிவும், உள்ளமும்தான். அந்த இரண்டும்தான் உண்மையில் என்னிடமிருந்து உனக்கு கிடைத்தவை.

நீ பூமியில் பிறக்கும்போது, உயிரோட்டத்தைத்தவிர, யோசிக்கும் அறிவும், கருணையான உள்ளமும்தான் என் பரிசுகள். குருட்டுத்தனமான உன் நம்பிக்கையில், என் பரிசுகளை நீ உதாசீனப்படுத்திவிட்டாய்.
அசிம், உன் பிரிய மகளுக்கு நீ ஆசையாக கொடுத்த பரிசுகளை அவள் தூக்கிப்போட்டால் நீ எப்படி உணருவாய்!

உன் நம்பிக்கை அதைக்கூட உணர முடியாத அளவிற்கு குருடாக இருந்தது. வரலாறு, புவியியல், உயிரியல், உலக நடப்புகள், விஞ்ஞானம், கணிதம், மனித உரிமைகள் எல்லாவற்றையும் புறக்கணித்தாய்; விஞ்ஞான உண்மைகளை திரித்தாய், வரலாற்று கற்பனைகளை உருவாக்கி புது விளக்கங்களை கற்பனையில் புணைந்தாய். அந்த கற்பனை விளக்கங்களில் மேலும் நம்பிக்கை பெற்று உன் தவறான செயல்களையும், எண்ணங்களையும் நியாயப்படுத்தினாய்.

அசிம்: அல்லாஹ், நான் தவறு செய்தேன் என்று தெரிந்துகொண்டேன். என் தவறுகளுக்கு வருந்துகிறேன். நீங்கள் பெருத்த கருணையுள்ளவர், தயை செய்து என்னை மன்னியுங்கள்.

இறைவன்: அசிம், நீ தவறுகளை உணர்ந்துவிட்டாய் என்று அறிகிறேன். ஆனால், நான் நியாயமாகவும், நீதியாகவும் நடப்பவன் ஆனதால், நீ நரகத்திற்கு போயே ஆகவேண்டும். பல நல்லவர்களைக் கொண்டிருந்த உன் சக மனித சமுதாயம் மீளாத நரகத்தில் வாட்டப்படும் என்று நீ நம்பியிருந்தாய். நான் உனக்கு கொடுத்த நற்பண்புகளை ஒதுக்கிவிட்டு, என் பெயரில் வன்முறைச்செயல்களையும், நெறிகெட்ட செயல்களையும் செய்திருக்கிறாய். உன் கோழைத்தனம் உன் உள்ளத்தை இழக்கச்செய்தது, உன் அறிவையும், மனித நேயத்தையுதம் இழந்தாய். ஆனால், இப்போது இதை சரிசெய்ய தாமதாகிவிட்டது. ஏனென்றால், இன்று இறுதி தீர்ப்புநாள்.

முற்றும்


ஏக இறைவனின் தொடரும் தோல்விகள்

December 19, 2007

பல மதங்கள் புனித நூல்களை கொண்டுள்ளன. அந்த மதங்களைப்பொறுத்தவரை, அவர்களுடைய புனித நூல்கள் இறைவனின் அருளால் விளைந்தவை என்றும் சில இறைவனின் வார்த்தைகளாகவே கருதப்படுகின்றன. இறைவனின் நேர்மொழியாகிய வேத-நூல் என்பது ஆப்கராமிய மதங்களுக்கே உறிய தனித்தன்மை என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், வேறு பல மதங்களுக்கும் இந்த புனிதநூல் நம்பிக்கை இருக்கிறது. உதாரணமாக, பல கடவுள்களை கொண்டுள்ள இந்து மதத்தின் புனித நூலான வேத-நூல்கள் மனித அறிவுக்கு விஞ்சிய முனிவர்களின் தெய்வீக பார்வையில் விளைந்த ஆன்மீக உண்மைகள் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இந்த வேதங்கள் ஆயிரக்கணக்கான பாடல்கள் கொண்டவை.

இப்படி புனித நூல்கள் தொடர்ந்து பல வடிவங்களில் மனிதனுக்கு கிடைத்துக்கொண்டே இருந்திருக்கின்றன. ஆனால், 14ஆம் நூற்றாண்டில் ஒரு அரபியன் நானே இறுதித்தூதன் என்று சொல்லி இறைவனின் இறுதியான வார்த்தைகளை வெளிப்படுத்தியதாக சொல்லிக்கொண்டான். அது மட்டும் அல்ல! மற்ற இறைதூதர்களைப்போல இல்லாமல், அவன் நடவடிக்கை புதுமையாக இருந்தது. தன் செய்தி மட்டுமே உண்மையானது, அதுவும் இறுதி உண்மையானது என்று அவன் அறிவித்தான். தன்னையோ, தன் புனித செய்தியையோ நம்பாதவர்களை கறைபட்டவர்கள் (நஜஸ்) என்று பிரகடணம் செய்தான். தன்னை நம்பாதவர்களை ‘இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்” என்று சொல்லி அவர்களை கொல்லவோ அல்லது இரண்டாம் தர மக்களாக (திம்மிகளாக) அடிமைப்படுத்தவும் செய்தான். இந்த புரட்சி செய்தியின் அடாவடித்தனத்தை பார்த்தால், இதை கேட்ட மற்ற அரேபியர்கள் முதலில் எதிர்த்ததில் ஒரு ஆச்சரியமுமில்லை.

இந்த பிரகடணத்தில் சிந்தனையாளர்களுக்கு சில கேள்விகள் எழுகின்றன. எல்லாம் வல்ல அந்த இறைவன் இவ்வளவு தீவிரமான இறுதி உண்மையை மனிதகுலத்துக்கு தெரியப்படுத்தும்போது அதற்கு ஏன் ஒரு மதிப்பும், மரியாதையும் இல்லாது போனது? எல்லாம் அறிந்த அல்லாஹ்வின் இந்த செய்தி ஒரு சிறப்பான கருத்தும், சிற்ப்பான மொழிநடையும் இல்லாது போனது ஏன்? இது இறைவனின் இறுதி செய்தி என்றால், இந்த செய்தியை முதலில் தெரிவித்த முஹம்மது (ஸல்) ஏன் மக்களின் எதிர்ப்பை பெற்று ஊரை விட்டு ஓடவேண்டியதாகியது?

மேலும், 1400 ஆண்டுகள் ஆகியும், இந்த இறைவனின் இறுதி உண்மைச்செய்தி இவ்வுலகில் இன்னும் மூன்றில் இரண்டு பங்கு மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது ஏன்?

இதற்கு விடை காண, நாம் இறைச்செய்தியின் சில இயல்புகளை ஆராய வேண்டும். இறைவனின் செய்தி என்று ஒன்று வருமானால், அதை இவ்வுலகில் மனிதர்களால் புரிந்து அதை பின்பற்ற சில தேவைகள் இருக்கின்றன. செய்தி சொல்ல சரியான சமயம், செய்தியை தெளிவுபடுத்த சரியான மொழி, வழங்க சரியான இடம், அதை அறிவிக்க சரியான தூதர் எல்லாம் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த செய்தி மானுடத்தை இன்னும் மேம்படுத்தி இறைவழிப்படுத்தக்கூடிய தகவலை கொண்டதாக இருக்க வேண்டும்.

முஹம்மது (ஸல்) வழங்கிய இறை செய்தியை இந்த கோணங்களில் ஆராய்வோம்!!

1. ஏழாம் நூற்றாண்டு சரியான தருணமா?

முதல் நூற்றாண்டுக்கு முன் பல தூதர்களை (மூசா, ஏசு மற்றும் பலர்) அனுப்பி தோல்வியுற்ற அல்லாஹ் காலம், நேரத்தை மறந்துபோயிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏசு நபி தோன்றிய 700 ஆண்டுக்கு பின், திடீரென, 7ஆம் நூற்றாண்டில் அல்லாஹ் தன் இறுதி தூதரை அனுப்ப தயாராகிறார். அல்லாஹ் மட்டுமே ஏக இறைவனாகவும், முஹம்மதுவின் செய்தியே அல்லாஹ்வின் நேர்வழியாகவும் இருக்குமானால், ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னம் தோன்றிய மனிதர்களுக்கு உய்வதற்கு வழி என்ன? அவர்கள் மிகவும் துரதிருஷ்டவாதிகள் இல்லையா? இந்த இறுதி செய்தி அப்போது இல்லாமல் போவதற்கு அவர்கள் என்ன தவறு செய்தார்கள்.

இறைவனின் உண்மை செய்தி புவியில் தோன்றிய எல்லா மானுடர்களையும் உய்விக்க செய்யவேண்டும். அதனால், அது மானுட தோற்றத்தை முந்திய அல்லது அந்த தோற்றத்தோடு சமகாலத்தில் இணைந்த ஒரு செய்தியாக இருக்க வேண்டாமா? மனிதனை படைக்கும்போதே அந்த இறுதி செய்தியை வழங்கி எல்லா மனிதர்களையும் நல்வழிப்படுத்த எல்லாம் வல்ல இறைவன் ஏன் தவறிவிட்டான் என்று சந்தேகம் தோன்றுகிறது.

2. அரபி சரியான மொழியா?

அல்லாஹ்வின் முந்தைய செய்திகள் அரமிய மொழிகளில் அமைந்தவை. அவற்றில் தன் செய்தி சரியாக நிலைக்காமல் தோல்வி கண்டு, பின்னர் இறுதிசெய்தியாக அரபி மொழியை இறைவன் தேர்ந்தெடுத்தது ஏன்? அரபி மொழி உலகில் மிகவும் குறைந்த நபர்கள் மொழிகளில் ஒன்றாக இருந்தது, இருக்கிறது. மேலும், அரபி மொழி உலக தொடர்பில்லாத பாலைவன குடியாட்கள் பேசும் மொழியாக இருந்தது. இறைவனின் இறுதி மொழியாக அல்லாஹ் இதை ஏன் தேர்ந்தெடுத்தான்?

இஸ்லாமியர்கள் அரபி மொழி மிகவும் அழகான கவிதைநயமான மொழி என்கிறார்கள். மேலும், குர்ஆனை மற்ற மொழிகளில் மாற்றினால் அந்த அழகு சிதைந்துவிடும் என்கிறார்கள். அல்லாஹ்வின் நோக்கம் மனித குலத்தின் ஈமானும், அழியாத அமைதி இறுதி வாழ்வுமாக இருக்க வேண்டும். அதனால், அல்லாஹ்வின் செய்தி தெளிவாகவும், யாராலும் குழப்பிக்கொள்ள முடியாததாகவும் இருப்பது முக்கியமே தவிர மொழி அழகும், கவிதை நயமும் அல்ல. உலக மொழி வல்லுனர்கள் அரபி மொழி ஒரு தெளிவான, எளிதான மொழி அல்ல என்கிறார்கள். அதனால் இறைவனின் இறுதி செய்திக்கு இது ஒரு சிறந்த மொழி இல்லை.

3. அரேபிய பாலைவனம் சரியான இடமா?

யேசுவுக்கு முன்னமே, முஹம்மதுவுக்கு பல நூற்றாண்டுக்கு முன்னமே, பல நாகரீகங்கள் (கிரேக்க, இந்திய, பாரசீக, சீன நாகரீகங்கள் முதலியவை) இன்னும் பெரிதாகவும் இன்னும் வளரச்சி பெற்றும் இருந்தன. இந்த நாகரீகங்கள் அரேபிய குடியிருப்பை விட பண்மடங்கு மக்கள்தொகை கொண்டும், அறிவுத்திறனில் பல தளங்கள் முன்னேறியும் வாழ்ந்து வந்தனர். கிரேக்க, ரோமாயின நாகரீகத்தின் தாக்கம் உலகம் முழுதும் விளைந்திருந்தது. இந்திய, சீன நாகரீகங்கள் பாரசீகத்திலிருந்து ஜப்பான் வரை பரவியிருந்தன.

இதை விடுத்து, அல்லாஹ்வின் இறுதிச்செய்தியோ அரேபியா என்ற ஒரு சிறிய உலகத்துண்டை பற்றிய அறிவையே கொண்டிருக்கிறது. கிரேக்க இந்திய மனோதத்துவங்களோடு போட்டிபோட்டால் தன் செய்தி எடுபடாது என்று அல்லாஹ் பயந்து அவர் அரேபிய பாலைவன நாகரீகத்தை தேர்ந்தெடுத்தார் என்று தோன்றுகிறது. உலகத்தில் ஒதுங்கிக்கிடந்த ஒரு சிறிய மனித குடியிருப்பான அரேபியாவையும், அரேபியர்களுக்கே பெரும்பாலும் தெரியாமல் பொதுவாக குழம்பிக்கொள்ளும் ஒரு அரேபிய மொழியும் இறைவன் தன் இறுதி உண்மைச்செய்தி வெளிப்பட தேர்ந்தெடுத்தது ஏன்?

குர்ஆன் அமைந்த அரபி மொழி தவறான தேர்வு என்று பார்க்கும்போது, இன்று திருக்குர்ஆனுக்கு ஆயிரக்கணக்கான மாறுபட்ட விளக்கங்கள், புரிதல்கள், வழக்கங்கள் இஸ்லாத்தில் நிலவுவது ஆச்சரியமில்லை. ஒரே செய்திக்கு அமைதியாகவும், அபாயகரமாகவும் புரிதல்கள் நிலவுவது இந்த குழப்பத்தை காட்டுகிறது.

4. முஹம்மது சரியான தூதரா?

முஹம்மது (ஸல்) மற்ற நபிகளின் செய்திகளை திறுத்தி புனிதப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஆதாம், மூசா, ஏசு போன்ற பல நபிகள் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால், அந்த நபிகள் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெறவில்லை. அப்படியானால், அல்லாஹ் தன் தேர்வில் தொடர்ந்து தவறு இழைத்துக்கொண்டே இருந்திருக்கிறார். அல்லாஹ் அனுப்பிய தூதர்கள் இறைவனின் செய்தியை சரியாக வழங்க தொடர்ந்து தவறிவிட்டார்கள் என்றும் அல்லாஹ் மீண்டும் மீண்டும் புதிய நபிகளை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்திருக்கிறது என்றும் அறியும்போது அல்லாஹ்வின் அறிவில, திறமையில் நமக்கு சந்தேகம் வருகிறது. இந்த நபிமார்கள் தோல்வி அடைவார்கள் என்று அல்லாஹ்விற்கு முன்னமே தெரியாதா?

இறுதி தூதராக வந்த முஹம்மது (ஸல்) அவர்கள் கூட தன் நோக்கத்தில் தோற்றுவிட்டார் என்றே தோன்றுகிறது. 1400 ஆண்டுகள் ஆகியும் இஸ்லாம் இன்னும் முழுதுமாக ஏற்கப்படாமல் இருக்கிறது. ஏற்கப்படாதது மட்டும் அல்ல, உலகில் மிகவும் பயந்து வெறுக்கப்பட்ட ஒரு மதமாக இருக்கிறது.

பொதுவாக, நபிமார்களிடம் நாம் விரும்பும் இனிய குணங்கள் கொண்டவராக முஹம்மது இல்லை. முஹம்மதுவின் பல குணங்கள், அவரின் பல செயல்கள் பல இடங்களில் எடுத்துச்சொல்லப்பட்டு விட்டன. அதை இங்கு நான் மேலும் சுட்ட விரும்பவில்லை.

ஆனால், இந்த இறைச்செய்திகளின் ஒரு முக்கிய பிழையாக ஒரு ஆச்சரியத்தை காண்கிறேன். அல்லாஹ்வின் அனைத்து நபிமார்களுமே படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். முஹம்மதுவும் இப்படியே இருந்தார்.

நபிகளுக்கு படிப்பறிவு முக்கியமா? ஆம், நிச்சயமாக. அதுவும் இதுவே மாற்ற இயலாத இறுதிச்செய்தி என்று சொல்லப்படும் செய்தியை கொண்டுவரும் நபிக்கு படிப்பறிவு இன்றியமையாததாக ஆகிறது.

ஒரு இறைச்செய்தி சுவனத்தில் புத்தகத்தில் எழுதப்பட்டு, அங்கேயே பிரசுரிக்கப்பட்டு, அழகான நூல்களில் கோர்க்கப்பட்டு இங்கு இவ்வுலகில் அந்த புத்தகம் நபிமார்களால் வினியோகம் மட்டுமே செய்யப்படுமானால், நபிகளுக்கு படிப்பறிவு முக்கியம் இல்லைதான். ஆனால், நடந்தது என்ன? முஹம்மது குர்ஆனை எழுத சில நபர்களை நியமித்திருந்தார். ஆனால், அவர்கள் எழுதியதை சரிபார்க்க அவருக்கு படிப்பறிவு இல்லை. இதனால் இன்று இஸ்லாத்தில் நம்பும் ஈமான்களின் விதி அந்த எழுத்தாளர்களின் நினைவாற்றலில் விளைந்து அவர்கள் கிறுக்கிக்கொண்டு பின்னர் வடிவமைத்த சில வரிகளில் இருக்கிறது.

இன்று உலகம் முழுதும் 120 கோடி முஸ்லிம்கள் பின்பற்றுவது இறைவனின் நேர் வார்த்தைகள் அல்ல. முஹம்மதுவுக்கு அல்லாஹ் சொன்னவை கூட அல்ல. முஹம்மது அல்லாஹ் தனக்கு சொன்னதாக சொன்ன செய்தி கூட இல்லை. மாறாக, தவறிழைக்கும் குணமுள்ள சில சாதாரண மனிதர்களால் தங்கள் நினைவாற்றலிருந்து எழுதப்பட்ட, அதை யாராலும் சரி பார்க்க முடியாத ஒரு செய்தி. அல்லாஹ் திரும்பத்திரும்ப ஒரு படிப்பறிவு பெற்றவரை ஏன் தேர்ந்தெடுக்க மாட்டேன் என்கிறார் என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. இதனால், அல்லாஹ் சரியான நபியை தேர்ந்தெடுப்பதில் தோற்றார் என்றுதான் தோன்றுகிறது.

5. திருக்குர்ஆன் சரியான செய்தியா?

திருக்குர்ஆன் ஒரு தெளிவான, எளிமையான முழுமையான செய்தி என்று சொல்லிக்கொள்கிறது. ஆனால், குர்ஆனை பின்பற்றுவர்களின் செயல்கள் இதை நிரூபிக்கவில்லை. பல தெய்வங்களை வணங்கும் காபிர் மதங்களை விட இஸ்லாத்தில் இன்று அதிக பிரிவுகள் இருக்கின்றன. அந்த பிரிவுகள் இடையே வெறுப்பும், கொலைவெறியும் காண கிடைக்கின்றன. இவை 7ஆம் நூற்றாண்டு அரேபியர்களின் நாடோடி, காட்டுமிராண்டி மன நிலையை எதிரொலிக்கின்றன. ஈரான்-ஈராக் யுத்தமும், பாகிஸ்தானில் தொடரும் உள்நாட்டு வன்முறைகளும் தொடரும் இந்த வெறுப்பு, கொலைவெறியை நமக்கு காட்டுகின்றன. “அமைதி மார்க்கம்” என்று முஸ்லிம்களால் கருதப்படும் ஒரு மதம், தன் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி தெளிவான செய்தியின் இன்றைய நிலை இதுதான். இதைத்தவிர, இஸ்லாத்துக்கு பிற மதங்களுடான பிணக்குகளைப்பற்றி நான் நினைவுபடுத்த தேவையில்லை. மத-நல்லிணக்கம் என்பது குர்ஆனில் நாம் காணவில்லை. சகிப்புத்தன்மை அற்ற, சுய சிந்தனைக்கு வழியில்லாத ஒரு அடிமை வாழ்க்கையே இஸ்லாத்தின் மார்க்கமாக நமக்கு ஆப்கானிஸ்தான், சவுதி முதலிய நாடுகளில் காண கிடைக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் நிகழும் அடிமட்ட வறுமை குர்ஆனை முழுதும் கடைபிடிப்போரின் நிலையை காட்டுகிறது.

அல்லாஹ் எல்லாவிதத்திலும் தோல்வியுற்றதாகவே கருதப்படவேண்டும். இப்படி தொடர்ந்து தோல்வியுறும் ஒருவன் இறைவனாக இருக்க முடியாது.